6 வயது பேத்தியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா... கோவையில்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஆறு வயது பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் - சசிகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஒன்றாம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை. இதையடுத்து குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

An old man arrested in rape case

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். இது குறித்து காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. போலீசாரின் விசாரணையில் செல்வக்குமாரின் மாமனார் வெள்ளிங்கிரி (60) என்பவர் குழந்தையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளிங்கிரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள வெள்ளியங்கிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாத்தா உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+