திமுக கட்சி நிகழ்ச்சியில் கூட்டம் கூட்ட அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்துவதா? அண்ணாமலை கொந்தளிப்பு
கோவை: கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் சொல்லி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.
இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications