விஏஓ முதல் தாசில்தார் வரை.. ராத்திரி 7 மணிக்கு எகிறி குதித்த மொரட்டு ஆள்.. நீலகிரியே ஆடிப்போச்சு
ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரவு முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் தப்ப முயன்ற புரோக்கர் வசமாக சிக்கினார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு திடீர் நடவடிக்கையில் இறங்குவது வழக்கமாகும். அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை வசூல் செய்வதை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

நேற்று செங்குன்றம், ஆலந்தூர், அச்சரப்பாக்கம்,திருப்போரூர், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்திலும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி யூனியன் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தினார்கள். கோவை மாவட்டத்தை பொறுததவரை சோதனைச்சாவடி மற்றும் நகர ஊரமைப்பு அலுவலகம் ஆகிய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தினார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அலுவலக நேரம் முடிந்த பிறகு அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்று செல்வதாகவும், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு 7 மணி அளவில் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில், அதிகாரிகள் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து புரோக்கர் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அவரை பிடித்த அதிகாரிகள் அதிரடியாக அலுவலகத்தின் கதவுகளை மூடி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் கோத்தகிரி தாசில்தார் உள்பட அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக டிஎஸ்பி தலைமையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு வரை நீடித்த சோதனையில் அங்கு பரபரப்பு நிலவியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications