சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அச்சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் அனுப்பி கொடூரமான நிலைக்கு ஆளாக்க காரணமாகி கைதான வியாசர்பாடி அறவழிச்சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எண்கணித சோதிடர் அறவழி சித்தர். 42 வயதாகும் இவரது மனைவி பெயர் தனலட்சுமி.

இரவு நேர பூஜை, குளி சொல்வது என இருந்து வந்தார் அறவழி சித்தர். இரவு நேர பூஜையில் அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி அருகே ஒரு சிறுமி போலீஸாரிடம் சிக்கினார். அந்த சிறுமி கொடுத்த தகவல் போலீஸாரை அதிர வைத்தது.

வியாசர்பாடியைச் சேர்ந்த அந்த சிறுமி, அறவழிச் சித்தரால், சிறுமியின் தாயாரின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்டார். பின்னர் சுரேஷ் என்ற நபரிடம் சிறுமி விற்கப்பட்டுள்ளார். சுரேஷ், ஒரு விபச்சாரக் கும்பலிடம் சிறுமியை அனுப்பியுள்ளான். அங்கு பலரிடம் அந்த சிறுமி அனுப்பப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

Aravazhi Sithar's wife commits suicide

இதையடுத்து சென்னை போலீஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறவழி சித்தர், சுரேஷ் உள்ட 5 பெண்கள், 2 ஆண்களைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் அறவழிச் சித்தரின் மனைவி தனலட்சுமி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார். வீட்டு பாத்ரூமில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்து போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+