ரூ. 28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஏ.டி.எம் கார் ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!
28 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் வாகனத்தை கடத்திச் சென்ற ஓட்டுநரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை : ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வேனில் இருந்த ர். 28 லட்சம் பணத்துடன் மாயமான ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப தனியார் நிறுவனங்கள் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலையில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அங்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம்.,களில் சென்று நிரப்பி வருவார்கள். அப்படிச் செல்லும் வாகனங்களில் வங்கி ஊழியர் ஒருவர், டிரைவர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஆகியோர் பணியில் இருப்பர்.

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் சார்பில் பணம் நிரப்ப தனியார் வங்கி ஊழியர்கள் நேற்று சென்றனர். அதில் ஊழியர்கள் கருணாகரன், ராஜ்குமார், காவலர் கியாவூதின் ஆகியோர் இருந்தனர். வாகனத்தை ஓட்டுனர் உதயகுமார் ஓட்டிச் சென்றார்.
இறுதியாக சென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கனரா ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப பிற்பகல் 3 மணியளவில் வந்தனர். அங்கு ஊழியர்கள் இருவரும் உள்ளே சென்று பணம் நிரப்பிக்கொண்டிருந்த நிலையில், கியாவூதின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக வாகனத்தை கிளப்பிச் சென்றார் ஓட்டுனர்.
மாயமான ஏ.டி.எம் வேனில் 28 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாயமான ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் உதயகுமார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை தூத்துக்குடி விரைந்துள்ளனர் தனிப்படை போலீஸார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் தற்காலிக ஊழியராக உதயகுமார் பணியில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications