கருணாநிதி இன்னும் பல ஆண்டுகள் சேவை புரிய வேண்டும்.. பாஜக முரளிதரராவ் பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் கொஞ்சம் குணமாகி உள்ளது.
ஆனால் சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை. சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு சென்று பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் விசாரித்தார். அவருடன் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விசாரித்தனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு சென்று தமிழிசை, முரளிதரராவ் உள்ளிட்ட தலைவர்கள் விசாரித்தனர் #KarunanidhiHealth #Karunanidhi #Kalaignar #Gopalapuram #கலைஞர் #கருணாநிதி #KauveryHospital pic.twitter.com/XEw4QCJSAo
— Oneindia Tamil (@thatsTamil) July 29, 2018
அதன்பின் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு சேவை புரிந்துள்ளார் கருணாநிதி. நாடு முழுவதும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளிக்கும் கருணாநிதி நலம் பெறுவார். மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவை புரிய வேண்டும். என்றுள்ளார்.