4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல்… ‘வார்னிங்’ கொடுத்த ரயில்வே ஊழியர் கைது
நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக ரயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் கடிதத்தை மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ளனர். இதனால் சென்னையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சென்னை: நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை தகர்க்கப் போவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இது மாவோயிஸ்டுகள் அனுப்பிய கடிதம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அந்த மிரட்டல் கடிதத்தில் நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி நெல்லை ரயில்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களும் அரக்கோணம் அருகில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்றும், தூத்துக்குடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் அருகில் தகர்க்கப் போவதாகவும் அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செல்போன் எண்கள்
இதுதவிர, மிரட்டல் கடிதத்தில் 9 செல்போன் எண்களை குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செல்போன் எண்கள் யாருடையவை என போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். இதனால், ரயில் நிலையங்கள் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கைது
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன்களை ஆய்வு செய்த போது மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ஊழியர்
திருத்தணியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளார். ரயில்வேயின் முன்னாள் ஊழியரான இவர் ஏற்கனவே 2011ம் ஆண்டு இதே போன்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
விசாரணை
விசாரணையில், உறவினர்களை பழிவாங்க இதுபோன்று செய்ததாக போலீசாரிடம் கங்காதரன் கூறியுள்ளார். யார் யாரை பழிவாங்க நினைத்தாரோ அவர்களின் செல்போன் எண்களைத்தான் கடிதத்தில் கங்காதரன் குறிப்பிட்டிருக்கிறார். செல்போன் எண்களுக்கு உரியவர்கள், மாவோயிஸ்டுகள் என்று போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்தே அவர் இப்படி செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications