காவி ஷெர்வானியில் அம்பேத்கர் சிலை... உ.பி அரசின் விஷமத்தால் மீண்டும் சர்ச்சை!
உத்திரபிரதேசத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டு காவி நிறம் பூசப்பட்டு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
Recommended Video

படான்: உத்திரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை அவசர அவசரமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பேத்கர் சிலை காவி நிறம் பூசப்பட்டு அமைக்கப்பட்டதால் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
உத்திரபிரதேச மாநில துக்ரய்யா மாவட்டத்தில் உள்ள படானில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் போராட்டங்களையும் நடத்தினர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆக்ராவில் இருந்து புதிய அம்பேத்கர் சிலையை கொண்டு வந்து நிறுவ முடிவு செய்தது. அம்பேத்கரின் சிலை மீண்டும் அமைக்கப்பட்டாலும் போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. இதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்த விதம்.

காவி நிறத்தில் அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை பொதுவாக நீல நிற கோட் அணிந்தபடி கையில் சட்டபுத்தகத்தை ஏந்திய வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை காவி நிற ஷெர்வானியும், வெள்ளை நிற பைஜாமாவும் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
அரசின் காவிமய முயற்சி
அரசு அனைத்தையும் காவிமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் அம்பேத்கர் சிலையிலும் அதனை வெளிக்காட்டியுள்ளதாக தலித் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அண்மைக்காலமாக உத்திரப்பிரதேசத்தில் பூங்காக்கள், கட்டிடங்கள் என அனைத்தும் காவி நிறம் பூசப்பட்டது.

நீல நிறம் பூசப்பட்டது
தொடர்ந்து மக்களின் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட த் தலைவர் ஹேமேந்திர கவுதம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நீல நிறம் பூசப்பட்டது. போலீசார் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அம்பேத்கர் பெயர் மாற்றம்
சமூக புரட்சியாளர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை இனி பீம்ராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என்று உ.பி அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளிலும் இந்த மாற்றத்தை கொண்ட வர திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications