குன்னூர் அருகே பேருந்து விபத்து.. 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலி
குன்னூர் அருகே பேருந்து விபத்தில் 7 பேர் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குன்னூரில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து- வீடியோ
ஊட்டி: குன்னூர் அருகே பேருந்து விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டிக்கு 40-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றனர். உதகை- குன்னூர் இடையே மந்தாடா எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது கனமழையால் பேருந்து நிலைத்தடுமாறி 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். பேருந்தே உடைந்து நொறுங்கியது.

மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே விடாது மழை பெய்து வருகிறது.

பேருந்து இரண்டாக உடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. உதகை- குன்னூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications