ஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது... கோவை வங்கி ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் மட்டுமல்ல சும்மா பேசிக் கொண்டிருந்தாலே இனி சிறைவாசம்தான்... இப்படி பேசிக் கொண்டிருந்ததால்தான் கோவை வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக அதிமுகவினர் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கோவை வங்கி ஊழியர்கள் இருவரும் அடக்கம்.

கோவை அதிமுகவைச் சேர்ந்த புனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியது மற்றும் முதல்வரை தரக்குறைவாக பேசியது என்ற புகார்களின் அடிப்படையில் வங்கி ஊழியர்களான ரமேசும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கனரா வங்கிக்கு புனிதா சென்றுள்ளார். அங்கு தமக்கு தெரிந்த ஒருவரிம் தாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலலிதாவின் உடல்நிலை குறித்தும் பேசியுள்ளனர்.
இந்த பேச்சுகளின் போது வங்கி ஊழியர்களான ரமேஷும் சுரேஷும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சில கருத்துகளை கூறியுள்ளனர். இதனால் அவர்களுடன் புனிதா தகராறு செய்திருக்கிறார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இருவர் மீது புனிதா போலீசில் புகார் கொடுத்தார்.
இப்புகாரின் அடிப்படையில்தான் தற்போது வங்கி ஊழியர்கள் ரமேஷும் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக வதந்தி பரப்பினால் மட்டுமல்ல.. இனி ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏதாவது பேசினாலே கைது செய்யப்படுவீர்கள் என்பதை உணர்த்துகிறது கோவை 'அரெஸ்ட்'.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications