காவிரிக்காக சென்னை பல்கலை. மாணவர்கள் மூவர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் 3 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள். கார்த்திக், அன்பழகன் மற்றும் மேலும ஒரு கார்த்திக் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும், கும்பகோணத்தில் வேன், கார் ஓட்டுநர்கள் நலசங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கூட்டாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications