ஜெ., அமைச்சர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்த வேண்டும்: விஜயகாந்த் தடலாடி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியைப் போல தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில் வெள்ள நிவாரணத்தை முறையாக வழங்கக் கோரி இன்று தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது:

CBI to raid TN CM house, says Vijayakanth

கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிடாதது ஏன்? மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய அளவு நிவாரணம் வழங்கப்படவில்லை.

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்த வேண்டும். டெல்லியைப் போல தமிழகத்திலும் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

முன்னதாக கடலூரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தேமுதிகவினர் வைத்திருந்த பல பேனர்களை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+