சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ ரிசல்ட் மே 26ல் வெளியீடு: 10 வகுப்பு ரிசல்ட் மே 30ல்
சென்னை: சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 30ல் வெளியாக உள்ளது.
இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரையும் நடத்தியது.
12 ஆம் வகுப்பு தேர்வை, இந்தியா முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 28 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 47 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 775 பேர் எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வை இந்தியா முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 23,488 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications