சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ ரிசல்ட் மே 26ல் வெளியீடு: 10 வகுப்பு ரிசல்ட் மே 30ல்
சென்னை: சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 30ல் வெளியாக உள்ளது.
இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரையும் நடத்தியது.
12 ஆம் வகுப்பு தேர்வை, இந்தியா முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 28 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 47 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 775 பேர் எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வை இந்தியா முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 23,488 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications