சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ ரிசல்ட் மே 26ல் வெளியீடு: 10 வகுப்பு ரிசல்ட் மே 30ல்
சென்னை: சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 30ல் வெளியாக உள்ளது.
இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரையும் நடத்தியது.
12 ஆம் வகுப்பு தேர்வை, இந்தியா முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 28 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 47 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 775 பேர் எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வை இந்தியா முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 23,488 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.
-
CBSE ஓஎஸ்எம் போர்ட்டல் ஹேக்கிங் சர்ச்சை: சோதனைத் தளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.. சிபிஎஸ்இ விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications