திருமுருகன் காந்தி மீதான சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கு ரத்து.. எழும்பூர் கோர்ட் அதிரடி
திருமுருகன் காந்தி மீதான சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமுருகன் காந்தி மீதான சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமுருகன் காந்தியை
சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட UAPA வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications