சபாநாயகர் செய்தது தவறுதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர்
Recommended Video

சென்னை: சபாநாயகர் செய்தது முற்றிலும் தவறானது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்ததாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறிய தீர்ப்பிலிருந்து நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் தெளிவாக தீர்ப்பில் சபாநாயகர் செய்தது தவறு என கூறியுள்ளார். இந்திரா பானர்ஜியும் கூட சபாநாயகர் செய்தது சரி என கூறவில்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுதான் தெரிவித்தார்.

"18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி கூறியதில் நான் மாறுபடுகிறேன். நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவில் தலையிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் 18 பேருக்கும் இழைத்தது இயற்கையான நீதிக்கு எதிரானது. சபாநாயகர் முடிவு தவறானது, காழ்ப்புணர்ச்சி கொண்டது. எனவே சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படும்" இவ்வாறு நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது 18 பேருக்கும் அவர்கள் தொகுதி மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications