Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாநாயகர் செய்தது தவறுதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு...வீடியோ

    சென்னை: சபாநாயகர் செய்தது முற்றிலும் தவறானது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்ததாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறிய தீர்ப்பிலிருந்து நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் தெளிவாக தீர்ப்பில் சபாநாயகர் செய்தது தவறு என கூறியுள்ளார். இந்திரா பானர்ஜியும் கூட சபாநாயகர் செய்தது சரி என கூறவில்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுதான் தெரிவித்தார்.

     Chennai High court delivers split verdict

    "18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி கூறியதில் நான் மாறுபடுகிறேன். நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவில் தலையிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் 18 பேருக்கும் இழைத்தது இயற்கையான நீதிக்கு எதிரானது. சபாநாயகர் முடிவு தவறானது, காழ்ப்புணர்ச்சி கொண்டது. எனவே சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படும்" இவ்வாறு நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இது 18 பேருக்கும் அவர்கள் தொகுதி மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+