"டாஸ்மாக்" சரக்கில் நச்சுத் தன்மையா?.. ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதன்மை பெஞ்ச் விசாரித்தது.

அப்போது, அரசுக்கு பல கோடி வருமானத்தை டாஸ்மாக் வழங்கி வருகிறது. இன்று தமிழக மக்கள் பலரும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மது குடிப்பதன் மூலம் மக்கள் உடல் நலம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுதாரர் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்றும், இந்த ஆய்வை டாஸ்மாக் நிறுவனேமே நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications