நகைக்கடைக் கொள்ளையன் நாதுராம் சென்னை போலீசிடம் ஒப்படைப்பு
கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் தமிழக போலீசிடம் ராஜஸ்தான் போலீசார் ஒப்படைத்தனர்.
Recommended Video

சென்னை: நகைக்கடை கொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ராஜஸ்தான் போலீசார் ஒப்படைத்தனர். இன்றிரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளார் நாதுராம்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடிக்கச் சென்ற போது நிடந்த துப்பாக்கிச் சூட்டில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். பெரியபாண்டியன் கொல்லப்பட்டு குறித்து சர்ச்சை நிலவியது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டு கொன்று விட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, தினேஷ் சவுத்ரி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
பெரியபாண்டியனை தாம் துப்பாக்கியால் சுடவில்லை என்று ராஜஸ்தான் போலீசில் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளையடித்த நகைகள் அனைத்தையும் சென்னையிலேயே விற்பனை செய்து விட்டதாகவும் கூறியிருந்தார் நாதுராம்.
ஜெய்ப்பூர் சிறையில் உள்ள கொள்ளையன் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை போலிஸ் காவலில் எடுக்க கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்களிடம் நாதுராமை சென்னை போலீசார் ஒப்படைத்தனர். நாதுராமை கைது செய்த தமிழக போலீசார் இன்றிரவு சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications