சென்னை சில்க்ஸில் 2-வது நாளாக பயங்கர தீ... கட்டுக்குள் வந்துவிட்டதா? - வீடியோ
சென்னை சில்க்ஸில் 2-வது நாளாக பற்றி எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தீயணைப்புத் துரையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் எரிந்து வந்த கட்டுக்கடங்காத தீயை 27 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தீயணைப்புத் துறை வீரர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சில்க்ஸில் நேற்று காலை 4 மணிக்கு தீ பற்றியது. அந்த நிமிடத்திலிருந்து அங்கு தீ மளமளவென பற்ரி எரிந்து வருகிறது. தகவல் அறிந்து வந்த 10 தீயணைப்பு வண்டுகளும் 150 தீயணைப்பு வீரர்களும் நேற்றிலிருந்து கடுமையாகப் போராடி வருகின்ரனர்.
அது 7 மாடிக் கட்டிடம் என்பதாலும் நெருங்கி அமைந்திருக்கும் கட்டிடம் என்பதாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது. தீயின் உக்கிரம் தாங்காமல் கண்ணாடி சுவர்கள் வெடித்து சிதறின. நான்காவது மாடி சுவர் இடிந்து விழுந்தது. புகையை வெளியேற்ற தீயணைப்பு வீரர்கள் பின்பக்க சுவரை இடித்தனர்.
ராட்சத வண்டிகள் கொண்டு 7ஆவது மாடியில் தண்னீரை பீய்ச்சி அடித்தனர். இப்படி பலவித போராட்டங்களுக்குப் பிறகு, தீ கட்டுக்குள் வந்திருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.