சென்னை குண்டுவெடிப்பு: ''அல் உம்மா அல்லது இந்தியன் முஜாஹிதீன் காரணமாக இருக்கலாம்''
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பை அல் உம்மா அல்லது இந்தியன் முஜாஹீன் அமைப்பைச் சேர்ந்தவர்களே நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
சென்னை போலீஸின் சிபிசிஐடி பிரிவு அதிகாரிகள் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அல் உம்மா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள் மீது போலீஸின் சந்தேகம் திரும்பியுள்ளதாம். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதப் பின்னணியுடன் யாரையும் இதுவரை கைது செய்யவும் இல்லை.
இருப்பினும் இதுவரை நடந்த விசாரணையின் முடிவில், குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு வருவதற்கு முன்பே ரயிலில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் உறுதியாக நம்புகின்றனராம்.
டைம் பாம்
இதற்கிடையே இந்த வெடிகுண்டு டைம் பாம் வகையைச் சேர்ந்தது என்பதை வெடிகுண்டு நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறைந்த சக்தி கொண்டது இது என்றும் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட குண்டுகளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் முன்பு நாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தியிருப்பதால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் திரும்பியுள்ளது.
மேலும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின்போது இதே போன்ற குண்டுகளைத்தான் அப்போது அல் உம்மா அமைப்பும் பயன்படுத்தியது. அதேபோ பாஜக, ஆர் எஸ்எஸ் தலைவர்களைக் குறி வைத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பிலும் இதேபோன்ற குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் வைத்து போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களது முக்கிய கூட்டாளியான அபுபக்கர் சித்திக் இன்னும் தலைமறைவாக உள்ளார். எனவே இவர்கள் மீதும் போலீஸ் சந்தேகம் திரும்பியுள்ளதாம்.
தலைமறைவாக உள்ள சித்திக்கைப் பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டுவெடிப்பைநடத்தியிருக்கலாம் என்பதும் போலீஸாரின் இன்னொரு சந்தேகம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications