மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதல்வர் எடப்பாடியார் புகழாரம்!
மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் வரவேற்க தக்க அம்சங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்ககானது என்றும் நடுநிலையானது என்றும் அவர் தெரிவித்துள்ளளார்.

பட்ஜெட்டுக்கு வரவேற்பு
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். வேளாண்மை மற்றும் ஊரகத் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

மெகா உணவு பூங்கா திட்டம்
வேளாண்துறைக்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். மெகா உணவு பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு
சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னையில் புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு குறித்து மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்படவில்லை
வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்பு, தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications