முதல்வர், ஊழல் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.. வெற்றிவேல் திட்டவட்டம்
சென்னை: முதல்வரும், ஊழல் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்தார். சென்னையில் தினகரன் இல்லத்தில் நிருபர்களை இன்று மதியம் சந்தித்த அவர் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும். எடப்பாடி மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது பன்னீர்செல்வம்.

எனவே எடப்பாடியும், அந்த ஊழல் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். அதுவரை ஆளுநர் இந்த அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதன் பிறகு பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கலாம். அல்லது அரசு மீது குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்பாரா?
சபாநாயகர் தனபால்போன்ற மடியில் கனம் இல்லாத ஒருவர் முதல்வர் பதவிக்கு வந்தால் வரவேற்போம். 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் தங்கியிருப்பதில் எந்த தவறும் கிடையாது. சேகர் ரெட்டியுடனும், அன்புநாதனுடனும் தொடர்புள்ளோர் ஆட்சியில் இருக்க கூடாது. இவ்வாறு வெற்றிவேல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications