இயக்குநர்கள் களஞ்சியம் உள்ளிட்டோர் மீது தடியடி- வெற்றிமாறன் நெஞ்சில் மிதித்த போலீஸ்
அண்ணா சாலையில் பாரதி ராஜா, வைரமுத்து மற்றும் சீமான் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.
Recommended Video
சென்னை: அண்ணா சாலையில் பாரதி ராஜா, வைரமுத்து மற்றும் சீமான் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் மீது தடியடி நடத்தப்பட்டது.
ஐபிஎல் போராட்டங்களை தடுக்க அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று அண்ணா சாலையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பாரதிராஜா, வெற்றி மாறன், கவுதமன், வைரமுத்து உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் வாலாஜா சாலைக்குள் சென்று சிலர் கற்களை வீசினர். இதனால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில் வெற்றி மாறன், களஞ்சியம் உள்ளிட்டோர் மீது போலீஸார் தடியடி நடத்தியது. வெற்றி மாறன் நெஞ்சில் ஏறினர் போலீஸார்.