சட்டசபையில் ஆவேசமாக பேசிய துரைமுருகனை ஆஃப் செய்து சிரிக்க வைத்த ஜெயலலிதா 'டைமிங்'
சென்னை: சட்டசபையில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் (திமுக) துரைமுருகனை தனது டைமிங் பேச்சால் சிரிக்க வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. மானிய கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, பதிலளித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் பேசினார். தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா உறுதியளித்தார்.

கருணாநிதி மீது குற்றச்சாட்டு
மேலும், மதுவிலக்கை ரத்து செய்தது திமுக தலைவர் கருணாநிதிதான் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையின்போது, குறிப்பிட்டார்.

துரைமுருகன் கோபம்
இதை கேட்டதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோபமடைந்தார். முதல்வர் கூறிய கருத்தை மருத்து பேசுவதற்கு, துரைமுருகன் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.

பாயின்ட் ஆப் ஆர்டர்
ஆனால், துரைமுருகன் ஆவேசகமாக பேச ஆரம்பித்தார். மேலும், முதல்வர் கூறியதில் 'பாயின்ட் ஆப் ஆர்டர்' உள்ளது என்று குரல் கொடுத்தார்.

விளக்கம் கேட்கும் விதிமுறை
'பாயின்ட் ஆப் ஆர்டர்' என்றால் ஒரு விஷயத்தில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அவை உறுப்பினர்கள் குறிக்கிட்டு கேள்வி கேட்க பயன்படுத்தும் அவை விதிமுறை சொல்லாகும். உண்மைக்கு புறம்பான ஒரு கருத்தை ஒருவர் அவையில் பேசும்போது, 'பாயின்ட் ஆப் ஆர்டர்' இருப்பதாக எந்த ஒரு உறுப்பினரும் குறுக்கிட்டு சொல்ல முடியும். அவர் விளக்கம் பெற முடியும்.

ஜெயலலிதா பதிலடி
இதை மனதில் வைத்து, துரைமுருகன், முதல்வர் உரையில் 'பாயின்ட் ஆப் ஆர்டர்' இருப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா புன் சிரிப்போடு எழுந்து, நானும் "ஒரு பாயின்ட் ஆப் ஆர்டர் கேட்கிறேன்' என்றார்.

மைக்கை மாற்றி பேசுகிறார்
சபாநாயகர் அனுமதியளித்ததை தொடர்ந்து, ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவரது ஒலிபெருக்கியில் பேசாமல், எதிர்க்கட்சித் தலைவர் (ஸ்டாலின்) ஒலிபெருக்கியில் பேசுகிறார். இது தவறாகும் என்றார்.

அவையில் கலகல
முதல்வர் சொன்ன பிறகுதான், மைக்கை மாற்றி பிடித்து பேசிய, தனது தவறை கவனித்த, துரைமுருகன், சிரித்துவிட்டார். பிற உறுப்பினர்களும் சிரித்ததால் அவை கலகலப்பானது. இதைத் தொடர்ந்து, எதற்கு வம்பு என்று, எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிபெருக்கியை துரைமுருகன் மடக்கியே வைத்துவிட்டார்.

விதிமுறை
சட்டசபையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பும்போது, தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையின் முன்பு நின்றபடிதான் பேச வேண்டும். தனது இருக்கையில் உள்ள மைக்கில்தான் பேச வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஸ்டாலின் வெளியே சென்றிருந்த நிலையில், அவரின் மைக்கில் துரைமுருகன் பேசியதைத்தான், ஜெயலலிதா கவனித்து சுட்டி காட்டியது குறிப்பிடத்தக்கது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications