தஞ்சாவூர்: அரசு பொருட்காட்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம்- குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி
தஞ்சாவூர்: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வம் படம், தஞ்சாவூரில் துவங்கிய அரசு பொருட்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மாநகராட்சி மைதானத்தில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய, அரசு பொருட்காட்சியை, கடந்த 17ம் தேதி, கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார்.

அரசுத்துறை அரங்குகள்
இதில், வருவாய், போலீஸ், வேளாண், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு உட்பட அனைத்து துறையினர் சார்பில், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த துறைகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் படம் இடம்பெற்றுள்ளது

பதவி இழந்த ஜெயலலிதா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா தானாகவே பதவி இழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களே இன்று வரை இருக்கின்றன.

முதல்வர் அறைக்கே போகாத ஓ.பி.எஸ்
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருந்த முதல்வர் அறைக்குகூட தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். செல்லாமல் தனது பழைய அறையிலேயே இருந்து வருகிறார்.

ஜெ.படத்தை அகற்ற வலியுறுத்தல்
இதனிடையே, அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர் படத்துடன்
இந்நிலையில், முதன் முறையாக அரசு பொருட்காட்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட, 17ம் தேதி மாலை, தஞ்சையில் அரசு பொருட்காட்சி துவங்கியது. இதற்கான அரங்குகள் அமைக்கப்பட்ட போது, முதல்வர் பன்னீர்செல்வம் படம் வைக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜெ.படமும் உண்டு
அதேசமயம் தமிழகத்தின் 2013-14க்கான சிறந்த நகராட்சிக்கான விருதை கும்பகோணம் நகராட்சிக்கு முதல் பரிசு மற்றும் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது" என்ற விளம்பரத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications