கந்துவட்டியால் பற்றி எரியும் மக்கள்.. கரடி கதை சொன்ன முதல்வர்!
கந்து வட்டி கொடுமைக்கு திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதே நேரத்தில் சிவகாசியில் கரடி கதை சொல்லிக்கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சிவகாசி: திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதே நேரத்தில் சிவகாசியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கரடி கதை கூறினார்.
பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கும் வகையில் கரடி கதை ஒன்றை பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
"ஆற்றில் சில நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் வசித்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் காப்பாற்றினர். ஒருவர் மட்டும் பேராசை காரணமாக ஆற்றில் மிதந்து வந்த பொருட்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தினார்.
அப்போது நண்பர்கள் பலரும் அவரைப் பார்த்து "வெள்ளத்தில் செல்பவர்களை காப்பாற்று... பேராசைப் படாதே நண்பா"... என்று கூறினர்.
அதை கேட்காமல் ஒருவன் மட்டும் பொருட்களை எடுத்து சேகரிப்பதிலேயே கவனமாக இருந்தான். அப்போது கம்பளி மூட்டை போன்று ஒன்று மிதந்து வந்ததைக் கண்டார்.
அதைப்பார்த்து ஆசையோடு ஓடிப்போய் பிடித்துக்கொண்டார். கம்பளி மூட்டையை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தான். நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு வர முடியவில்லை நடு ஆற்றிலேயே போராடிக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த நண்பர்கள்... "நீ சீக்கிரம் கம்பளி மூட்டையை விட்டு விட்டு கரைக்கு திரும்பி வா"... என்று கூப்பிட்டனர்.
அதற்கு அவனோ... "நான் எப்போதோ அந்த கம்பளி மூட்டையை விட்டு விட்டேன். ஆனால் இதுதான் என்னை விட மாட்டேங்குது. இது கம்பளி மூட்டையல்ல கரடிக்குட்டி" என்று கூறினான் அந்த நண்பன்.
பேராசை காரணமாக கரடியிடம் மாட்டிக்கொண்டான் அந்த நண்பன். இப்படித்தான் பலரும் சேரக்கூடாத இடத்திற்கு போய் சேர்ந்து கொண்டு அங்கிருந்து வர நினைத்தாலும் அவர்களை கரடி போல பிடித்துக்கொண்டு விட மறுக்கின்றனர் என்று கதை கூறிவிட்டு சிரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதெல்லாம் சரிதான் முதல்வரே... சிவகாசியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்து மாண்டு போனதே அவர்களுக்கு ஒரு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று கூடவா உங்களுக்கு தோன்றவில்லை என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications