For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் விபரீதம்: கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்கள்

By Siva
Google Oneindia Tamil News

Coimbatore: 2 arrested for allegedly raping a college student
கோவை: கோவையில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாஸ் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் இரட்டை சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சகோதரர்கள் பி.இ. படித்து வருகிறார்கள். அவர்களது குடும்பம் உகாண்டாவில் வசித்து வருகிறது.

இந்நிலையில் அவர்கள் மாணவியை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். மாணவியும் அவர்களின் வீட்டுக்கு சென்றார். அப்போது சகோதரர்கள் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து மாணவி சகோதரர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சகோதரர்களை கைது செய்தனர்.

விசாரணையில் மாணவி மயக்கத்தில் இருந்தபோது அவரை செல்போனில் வீடியோ எடுத்ததாக சகோதரர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். போலீசார் அந்த இருவரின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.

English summary
Two engineering students, who are twins allegedly sexually assaulted a collge girl in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X