அப்படியென்னதான் அக்கப்போரோ? ஒரே மேடையில அருகருகே உட்கார்ந்தும் பேசாத நக்மா, குஷ்பு!
ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒரே மேடையில் குஷ்புவும், நக்மாவும் அருகருகே அமர்ந்தும், இருவரும் முகம் கொடுத்து கூட பேசிக்கொள்ளவில்லை.
சென்னை : சம காலத்தில் ஹீரோயின்களாக நடித்து, இப்போது அரசியலிலும் ஒரே கட்சியில் இருக்கும் நக்மா, குஷ்பு இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியானது. இன்றைக்கு ராகுல் காந்திக்கு நடத்திய ஆர்பாட்டத்தில் அது வெட்டவெளிச்சமானது.
டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் ராம்கிஷன் கிரேவால் என்ற ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் டெல்லி ராம்லோகியா மருத்துவமனையில் இருந்த நிலையில், இவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்தர் மந்தர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.
கண்டன ஆர்பாட்டம்
ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் ராணுவ வீரரின் குடும்பத்தினரைச் சந்திக்க முயல மூன்று முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ராகுல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முழுக்க போராட்டம் நடந்துவரும் நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு, நக்மா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேசிக்காத குஷ்பு, நக்மா
கட்சியின் மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசரின் அருகில் அமர்ந்திருக்க, மேடையில் அனைவருக்கும் முன்பாக நக்மாவிற்கும், குஷ்புவிற்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது. கண்டன கூட்டத்தில் அனல் பறக்க பேசி பிரதமர் மோடியை கண்டித்து விட்டு அமர்ந்தார் குஷ்பு. நக்மாவின் அருகில் அமர்ந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து கூட பேசிக் கொள்ளவில்லை. நக்மா சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டார்.
பனிப்போர்
காங்கிரஸ் கட்சியில் நக்மா சீனியர். ஆனால் குஷ்பு திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறி வந்தவர். இருவருமே அகில இந்திய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறி வந்த நிலையில் இன்றைக்கு ஆர்பாட்டத்தில் இருவருமே அருகருகே அமர்ந்திருந்தும் பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது சரி ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏவான விஜயதாரணி இன்றைய ஆர்பாட்டத்தில் தட்டுப்படவில்லையே ஏன்?
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications