For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய 'காமர்ஸ்' மாணவர் கைது!

Google Oneindia Tamil News

குளித்தலை: வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாக பி.காம் மாணவர் கைது செய்ய்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது பரளி என்ற கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மா. 23 வயதாகும் இவர் திருமணமானவர். இதே ஊரைச் சேர்ந்தவர் நேரு. இவருக்கும் 23 வயதுதான் ஆகிறது. இவர் ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜம்மாவின் கணவர் வெளியில் போயிருந்தார். வீட்டில் ராஜம்மா மட்டும் தனியாக இருந்தார். அப்போது குடி போதையில் ராஜம்மா வீட்டுக்குள் புகுந்துள்ளார் நேரு.

பின்னர் ராஜம்மாவிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டாராம். இதனால் கத்திக் கூச்சல் போட்டாராம் ராஜம்மா. இதையடடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நேருவைப் பிடித்து விட்டனராம். பின்னர் போலீஸுக்குத் தகவல் போக அவர்கள் வந்து நேருவைக் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A college student was arrested for molesting a married woman near Kulithalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X