கரூர்: தினமணி அலுவலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல், போராட்டம்
கரூர்: கரூரில் தினமணி நாளிதல் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து தாக்குல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜோதிமணி போட்டியிடுகின்றார். இதனால் கருர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதந் காரணமாக, காங்கிரஸ் கட்சியினர் குறித்த தகல்களையும், செய்திகளையும் தினசரி நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன், தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் வந்திருந்தார்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி தின மணி நாளிதழில் வெளிவந்ததாக கூறப்படுகின்றது.
இதனால், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியனும், அவரது மகனும், கரூர் நகராட்சி கவுன்சிலருமான ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் , தினமணி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தினமணி நிருபர் அருள் ராஜ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் நிருபர் கண்ணன் , இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் கார்சன் ,மற்றும் புகைப்பட நிருபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்த நிருபர்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளிதழ் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications