சட்டமன்றத்தில் தூத்துக்குடி என சொல்ல முடியவில்லை..சாத்துக்குடி என்றுதான் சொல்ல வேண்டும்- ஸ்டாலின்
தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை, இனி தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கிண்டல் செய்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை, இனி தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கிண்டல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் இது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரச்சனைகள் கொஞ்சம் குறைந்து இருக்கும் இந்த நிலையில் கூட தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேச கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பு இல்லை. மக்களின் குரலை அரசு கேட்பதில்லை. ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒன்றாக செயல்படுகிறது. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களை வஞ்சிக்கிறது. சேலம் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்க அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது. சேலம் எட்டுவழி சாலைக்காக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்கிறது.
சட்டமன்றத்தில் தூத்துக்குடி பிரச்சனை பற்றியும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேச முடியவில்லை. தூத்துக்குடி என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தூத்துக்குடி என்று சொன்னாலே வெளியே அனுப்பிவிடுகிறார். இனி தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.