வர்தா புயலால் சென்னைக்கு கிடைத்த 38 செ.மீ மழை- தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பியது
வர்தா புயலினால் சென்னை சோழிங்கநல்லூரில் 38 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருந்து சென்னை தப்பியது.
சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னையை கடந்த போது, மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அப்போது கனமழை கொட்டியது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி சென்னை தனித்தீவாக காட்சியளித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 செமீ மழை பெய்துள்ளதான வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை சத்யபாமா கல்லூரியில் அதிகபட்சமாக 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காட்டுக்குப்பம் பகுதியில் 34 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மழை பதிவான இடங்கள்:
சத்யபாமா பல்கலைக்கழகம் - 38 செ.மீ
காட்டுக்குப்பம் - 34 செ.மீ
காஞ்சிபுரம் - 28 செ.மீ
களவாய் - வேலூர் மாவட்டம் - 23 செ.மீ
பூந்தமல்லி - 22 செ.மீ
செம்பரம்பாக்கம் - 21 செ.மீ
ஏற்காடு - 15 செ.மீ
கிருஷ்ணகிரி மாவட்டம்- 11 செ.மீ
திருவண்ணாமலை செய்யாறு - 11 செ.மீ
மரக்காணம் - 7 செ.மீ
பாலக்கோடு - 4 செ.மீ
உதகமண்டலம் - 2 செ.மீ
கடலூர் ஸ்ரீமுஷ்ணம் - 1 செ.மீ
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சரியாக பெய்யாத நிலையில் வர்தா புயலால் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து சென்னை மாநகரம் தப்பியதால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications