வர்தா புயலால் சென்னைக்கு கிடைத்த 38 செ.மீ மழை- தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பியது
வர்தா புயலினால் சென்னை சோழிங்கநல்லூரில் 38 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருந்து சென்னை தப்பியது.
சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னையை கடந்த போது, மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அப்போது கனமழை கொட்டியது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி சென்னை தனித்தீவாக காட்சியளித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 செமீ மழை பெய்துள்ளதான வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை சத்யபாமா கல்லூரியில் அதிகபட்சமாக 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காட்டுக்குப்பம் பகுதியில் 34 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மழை பதிவான இடங்கள்:
சத்யபாமா பல்கலைக்கழகம் - 38 செ.மீ
காட்டுக்குப்பம் - 34 செ.மீ
காஞ்சிபுரம் - 28 செ.மீ
களவாய் - வேலூர் மாவட்டம் - 23 செ.மீ
பூந்தமல்லி - 22 செ.மீ
செம்பரம்பாக்கம் - 21 செ.மீ
ஏற்காடு - 15 செ.மீ
கிருஷ்ணகிரி மாவட்டம்- 11 செ.மீ
திருவண்ணாமலை செய்யாறு - 11 செ.மீ
மரக்காணம் - 7 செ.மீ
பாலக்கோடு - 4 செ.மீ
உதகமண்டலம் - 2 செ.மீ
கடலூர் ஸ்ரீமுஷ்ணம் - 1 செ.மீ
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சரியாக பெய்யாத நிலையில் வர்தா புயலால் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து சென்னை மாநகரம் தப்பியதால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications