ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் தேர்தல் அறிவிக்கப்படும்: ஹைகோர்ட் நம்பிக்கை
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்ககு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறக்கப்பட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகாரால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கருதுவதாக கூறியது.
மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஜூன் மாத அறிவிப்புக்கு பின் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.












Click it and Unblock the Notifications