இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனுக்கு மர்மநபர் கொலை மிரட்டல் !
சென்னை: இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு மர்மநபர் தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம.கோபாலனின் உதவியாளர் பத்மராஜ் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று மாலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், ஏர்வாடியில் இருந்து இந்தியன் பேசுகிறேன். போலீஸ் பாதுகாப்பை மீறி ராம.கோபாலன் உள்பட இந்து முன்னணி தலைவர்களை இன்னும் ஒரு வாரத்துக்குள் வெட்டி கொலை செய்துவிடுவேன். என்று கூறியதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி அலுவலகத்தில் உள்ள தொலைபேசியில் வெளியில் இருந்து போன் நம்பர்களை பதிவு செய்யும் கருவி (காலர் ஐ.டி.) கடந்த சில நாட்களாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து போன் செய்தார் என்பது குறித்து ‘சைபர் க்ரைம்' போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications