காயத்ரி அண்ணியாருக்கும் மந்திரா ஐபிஎஸ்க்கும் உள்ள ஒற்றுமையை கவனிச்சீங்களா?

தெய்வமகள் சீரியலில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் காயத்ரி இப்போது மந்திரா ஐபிஎஸ் ஆக வந்திருக்கிறார். ஆனால் இருவரின் உருவ ஒற்றுமையும் ஒரே மாதிரி இருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அண்ணியார் காயத்ரி இல்லாத தெய்வமகளை பார்க்க மாட்டோம் என்று அவரது அடிவிழுதுகள் அடம் பிடிக்க, யோசித்து பார்த்த இயக்குநர் குமரன், அண்ணியார் போலவே ஒருவரை மந்திரா ஐபிஎஸ் ஆக கொண்டு வந்து விட்டார்.

தெய்வமகள் சீரியல் 1250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஜெய்ஹிந்த் குடும்பத்து மூத்த மருமகள் காயத்ரியின் வில்லத்தனத்தை பார்க்கவே சீரியல் ரசிகர்கள் 8 மணிக்கு டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள்.

சொத்துக்காக கொழுந்தனின் மனைவி, கணவனை கொல்ல நினைத்த காயத்ரியை பிரகாஷ் கொன்று விடவே, கதை உப்பு சப்பில்லாமல் போனது.

அண்ணியார் எங்கே

அண்ணியார் எங்கே

காயத்ரியின் மரணத்தோடு சீரியல் முடிந்துவிடும் என்று பார்த்தால் கதை ஜவ்வு இழுப்பாக இழுத்தது. அண்ணியார் பேயாக வருவாரோ என்று பலரும் யோசிக்கத் தொடங்க கதையில் திடீர் திருப்பமாக காயத்ரியின் வருகை அமைந்துள்ளது.

நடுரோட்டில் சுட்ட அதிகாரி

நடுரோட்டில் சுட்ட அதிகாரி

அஞ்சலியை கொல்ல வந்த ரவுடிகளை நடிரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு அசால்டாக செல்ல போலீஸ், அவரை காயத்ரி என்று கைது செய்து கொண்டு போன பின்னர்தான் தெரிகிறது அது காயத்ரி அல்ல என்றும் ஐபிஎஸ் அதிகாரி என்று தெரிந்து மரியாதை கொடுக்கின்றனர்.

மந்திரா ஐபிஎஸ்

மந்திரா ஐபிஎஸ்

காயத்ரிதான் திரும்ப வந்து விட்டார் என்று பிரகாஷ், சத்யா உள்பட எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க வந்தது மந்திரா ஐபிஎஸ். அதுவும் காயத்ரி கொலையை கண்டுபிடிக்க வந்திருக்கும் ஐபிஎஸ் அதிகாரியாம்.

வினோதினிக்கு விழுந்த அறை

வினோதினிக்கு விழுந்த அறை

காயத்ரியின் தங்கை வினேதினியும் தனது அக்கா என்று நினைத்து காயத்ரியை கட்டி பிடிக்க கன்னத்தில் அறைந்து பிடித்து தள்ளுகிறார் மந்திரா ஐபிஎஸ். பிரகாஷ், சத்யாவிற்கு வந்திருப்பது காயத்ரிதான் என்ற சந்தேகம் இருந்தாலும் நடவடிக்கைகள் எல்லாம் சற்றே யோசிக்க வைக்கிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு?

இன்னும் எத்தனை நாளைக்கு?

பிரகாஷை மிரட்டும் மர்மகுரல் , கார், நகை, பணம் எல்லாம் கொடுத்து ஆட்டிவைக்கிறது. அது அமைச்சரின் வேலை என்று தெரியவருகிறது. அதே போல கொலையை கண்டுபிடிக்க வந்திருக்கும் மந்திரா ஐபிஎஸ் நிஜமாகவே யார் என் புதிருக்கும் விடை தெரியவில்லை.

ஜவ்விழுப்பு இழுக்கும் இயக்குநர்

ஜவ்விழுப்பு இழுக்கும் இயக்குநர்

காயத்ரி மரணத்தை வைத்தே இன்னும் 500 எபிசோடுகள் நகர்த்தி விடுவார்கள். அதற்குள் சத்யாவிற்கு குழந்தை பிறந்து விடுமா? அல்லது அதை வைத்து ஒரு 500 எபிசோடுகள் இழுப்பார்களா? என்று கேட்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+