டெல்லியை கைப்பற்றுவோம் என அழகு தமிழில் அசத்திய ஆங்கிலோ இந்தியர் டெரிக் ஓ பிரையன்
Recommended Video
சென்னை: டெல்லியை ஒன்றிணைந்து கைப்பற்றுவோம் என்று மேற்கு வங்க எம்பி டெரிக் ஓ பிரையன் கேட்டார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியானது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசுகையில் அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும். இன்னும் 200 நாட்களில் இதை நாம் செய்ய வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.
அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும். இதற்கு திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் மேற்கு வங்கத்திலும் இதையே செய்வோம். நான் ரெடி நீங்க ரெடியா என்று கூறி டெரிக் ஓ பிரையன் தனது தமிழ்ப் பேச்சை முடித்தார் டெரிக் ஓ பிரையன்.
நான் ரெடி, நீங்க ரெடியா என்பதை 3 முறை உரக்க கேட்டார் டெரிக் ஓ பிரையன். அப்போது திமுக தொண்டர்கள் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர்.