சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவேண்டும்... தினேஷ் கார்த்திக் விருப்பம்
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட வேண்டும் என்று விரும்புவதாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை: அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து, சொந்த மாநில அணிக்காக ஆடவேண்டும் என்று தெரிவித்துள்ளார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.
கடந்த 2008ம் ஆண்டு முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் தினேஷ் கார்த்திக். வலது கை பேட்ஸ்மேன். சிறப்பான ஆட்டங்களைப் பலமுறை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை விதிப்பால் அந்த அணியில் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு இடம் பெற முடியவில்லை. அதனால் 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சொந்த மாநில அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது பற்றிக் கூறிய அவர், " சொந்த ஊர் அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆடவேண்டும். அதுதான் என்னுடைய கனவு. அடுத்த ஆண்டு அதற்காக நடக்கவிருக்கும் ஏலத்தில் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
டிஎன்பிஎல் போட்டிகள் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அப்போதுதான் தமிழக வீரர்கள் நிறையப் பேர் உலக அளவில் கிரிக்கெட் பிரபலங்களாக வளம் வரமுடியும்.
இந்த முறை நடக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 4 முறை வென்று அதிரடி காட்டியுள்ளது. இது பாராட்டுக்குரியது. இளம் வீரர்களுக்கு டிஎன்பிஎல் போட்டிகள் அவர்களின் கிரிக்கெட் கேரியருக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்." என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.












Click it and Unblock the Notifications