அண்ணா அறிவாலயத்திற்கு விஜயகாந்த் வரப்போவதாக பரவிய தகவல்…. பரபரப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்ணா அறிவாலயம் வரப்போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டும் சில முக்கிய கட்சிகளிடையே கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது என்று ஒருபுறம் திமுக கூறிக்கொண்டிருந்தாலும் எப்படியாவது தேமுதிக வந்து விடாதா என்று எதிர்பார்ப்போடுதான் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக உடன் கூட்டணி பற்றி பேசிக்கொண்டே திமுகவிலும் நூல் விட ஆரம்பித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை அறிவாலயத்திற்கோ, கோபாலபுரத்திற்கோ பேச வரலாம் என்று அழைப்பு விடுத்தார் திமுக தலைவர் கருணாநிதி.
இந்த நிலையில் நேற்றிரவு திமுக உடன் கூட்டணி தொடர்பாக பேச விஜயகாந்த் அறிவாலயம் வரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதனால் செய்தியாளர்களும், கட்சியினரும் அறிவாலயத்தில் குவிந்தனர். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தும் விஜயகாந்த் வரவில்லை. கடைசியில் அந்த தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications