ஜெ.விடம் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்!
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்ட ருசிகர சம்பவம் சென்னையில் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று திருவள்ளூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவின் வாகனம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நீல்கிரீஸ் அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அந்த சாலையில் வாகனங்கள் ஸ்தம்பிக்க நேரிட்டது. வாகனத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை பார்த்தபடியே சிரித்துக் கொண்டே உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஜெ. அன்பழகன் பிரசாரம் செய்ய அந்த இடமே கலகலப்பானது. வாகனத்தில் அமர்ந்திருந்தபடியே ஜெயலலிதாவும் இதை லேசான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தேர்தல்னா இப்படித்தான் இருக்கனும்ல!












Click it and Unblock the Notifications