திமுக அல்லது அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வராது: அன்புமணி ஆரூடம்
தூத்துக்குடி: அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லாத ஆட்சி அமையும் என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தென்மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியிலுள்ள ரெசார்ட் ஒன்றில் நடந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க ஆலோசனை வழங்கிய அன்புமணி, ஒவ்வொருவருக்கும் தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதன்பிறகு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி: இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. அதற்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஐ.நா மன்றத்தில் ராஜபட்சேவை பேச விடக்கூடாது என்கிற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொருத்தவரை திறமையில்லாத ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் மின் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு, இப்போதும் உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என ஏமாற்று வித்தை காண்பிக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தினார்கள். இப்போது உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்த கையோடு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தவறெல்லாம் செய்துவிட்டு எல்லாமே நன்றாக இருப்பதுபோல் மாய தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்.
நான் நேற்று திருச்செந்தூருக்கு போய் வந்தேன். இடையில் ஆத்தூர் வழியாக ஓடும் தாமிரபரணி ஆற்றை பார்த்தேன். அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், இதே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் பாலைவனம் போலவும் காட்சியளிக்கிறது. எனவே வீணாக போகும் நீரை முறையாக பயன்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம். அந்த மாதிரி எதாவது இதுவரை இருந்த தி.மு.க., அதி.மு.க. அரசுகள் செய்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
வருங்காலங்களில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் இவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். புதிய ஆட்சி வரவேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் இந்த இருகட்சிகளும் இல்லாத புதிய ஆட்சி தமிழகத்தில் மலரும். எந்த கட்சியெல்லாம் இதில் இடம் பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications