காவிரி மீட்பு பயணம்... ஏப்.16ல் திமுக கண்டன ஆர்பாட்டம் - ஸ்டாலின்
எஸ்சி எஸ்டி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி என்று ஸ்டாலின் கூறியுள்ளார். எஸ் சி, எஸ் டி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16ல் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக பிரிந்து நடைபெற உள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கால அவகாச மனுவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி மீட்பு பயணத்தை டெல்டாவில் நடத்துவது என்று ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்திருந்தோம். அதை எப்படி நடத்துவது என்று இந்த கூட்டத்தில் பேசினோம். நாளைய தினம் முக்கொம்புவில் இருந்து ஒரு குழுவும், 9ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவும் பயணத்தை தொடங்குகிறது.
இந்த பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தில் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
எஸ்சி எஸ்டி பிரச்சினையில் ஏற்கனவே இருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்ட சரத்துக்கள் நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வழியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்காக எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார். நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications