இன்னும் 3 மாசம்தான்.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரபோகுது.. ஸ்டாலின் பரபர!
தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலையுடன் ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் வேட்பளார்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு ஆதரித்து அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.

பட்டியல் உள்ளது
அப்போது வாக்காளர்களுக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் அதற்கு துணைபோன காவல்துறை அதிகாரிகள் யார் என்பதெல்லாம் தனக்கு தெரியும் என்றார். அவர்களின் பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நான் மன்னிக்க மாட்டேன்
திமுக ஆட்சிக்கு வரும் போது அந்த காவல்துறை அதிகாரிகள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி மன்னித்து விட்டுவிடுவார் என்று கூறிய ஸ்டாலின் தான் மன்னிக்கமாட்டேன் என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வரும்
மேலும் தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் 3 மாதத்தில் தேர்தல் வரும் என்று கூறிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications