ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு எம்எல்ஏ-வின் வாக்கிற்கு 176 மதிப்பு உள்ளது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு எம்எல்ஏ, ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் ஜனாதிபதியை பொதுமக்கள தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக எம்எல்ஏ, எம்.பிக்களே அவரை தேர்வு செய்கின்றனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி என்பவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார், அவருக்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

முப்படைகளின் தலைவர்
ராணுவம், கடற்படை, விமான படை ஆகிய முப்படைகளின் தலைவராக இருப்பவர் நாட்டின் ஜனாதிபதியாவார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவர் இந்தியாராக இருக்க வேண்டும். 35வயது நிறைவடைந்தவராகவும், எம்.பி. ஆவதற்கான தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆதாயம் தரும் பதவிகளை அந்த நபர் வகிக்கக் கூடாது. அந்த நபரை குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களாவது வழிமொழிய வேண்டும்

வாக்குகளின் மதிப்பு
பொதுதேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு கடந்த 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது.

எம்எல்ஏக்களுக்கு...
மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 1000-த்தால் பெருக்கி 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். இது மாநிலத்துக்கு மாநிலம் மக்கள்தொகையின் அடிப்படையில் மாறுபடும். தமிழகத்தை பொருத்தவரை மொத்த எம்எல்ஏ-க்களின் மதிப்பு 5,49,495 ஆகும்.

எம்பிக்களுக்கு...
எம்பிக்களை பொருத்தவரை நியமன உறுப்பினர்கள் நீங்கலாக லோக்சபாவில் 543 எம்பி.க்களும், ராஜ்யசபாவில் 233 எம்பி.க்களும் என மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர். ஒரு எம்பியின் வாக்கு மதிப்பை கணக்கிட மொத்த எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பை 776-ஆல் வகுக்க வேண்டும். அப்போது ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். மொத்த எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5, 49,408. எம்எல்-க்கள், எம்பிக்களின் மதிப்பை சேர்த்தால் மொத்தம் 10,98,903 ஆகும்.
Recommended Video


வாக்குப் பதிவு
எம்பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும், எம்எல்ஏ-க்களும் இளங்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க விருப்பம் என்பதில் 1, 2 என எண்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்படும் போது எந்த எண் கொண்ட வேட்பாளரை 50 சதவீதத்தினர் தேர்வு செய்துள்ளரோ அவரே வெற்றி வெற்றவராக அறிவிக்கப்படுவர். ஒருவேளை இருவரும் சமமாக இருக்கும் பட்சத்தில் விருப்ப தேர்வு வாக்குப்பதிவு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications