குடித்துவிட்டு கூவத்தூர் காவல் நிலையத்தில் ரகளை.. 6 மாதமாக குட்டி நாகராஜின் பரிதாப நிலை தெரியுமா?
செங்கல்பட்டு: குட்டி நாகராஜை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் பைக்கை பறிமுதல் செய்த போது இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசினார். ஆனால் இன்று அந்த நாகராஜின் நிலை பரிதாபத்துக்குரிய வகையில் மாறிவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 32 வயதாகிறது. ஆயினும் இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியாவார். இவர் சொந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார்.

கடந்த மே மாதம் போலீஸார் வாகன சோதனை செய்தபோது மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜை மடக்கிய போலீஸார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நாகராஜ் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். போதையில் நாகராஜ் செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த நபர் ஒரு டீசர்ட்டையும் நீல நிறத்தில் டவுசரையும் போட்டிருந்தார். அவர் போதையில் போலீஸாரை இஷ்டத்திற்கு வசை பாடினார். போலீஸாரை கண்ட படி பேசினார். உடனே போலீஸார் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டவுடன் பம்மிய நாகராஜ், ஒவ்வொரு போலீஸாரையும் நீ எந்த ஊரு நீ எந்த ஊரு என கேட்க அவர்களும் நான் ஜப்பான், நான் கொரியா என பதிலளித்தனர்.
அப்போது போலீஸார் நீதான் தைரியமான ஆளாச்சே, முன்னாடி ஏதோ எங்களை சொன்னியே அதை இப்போ சொல்லேன் பார்ப்போம் என்றனர். அதற்கு நாகராஜ் அதெல்லாம் சொல்ல முடியாது என்கிறார். ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றிவிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என சண்டைக்கு வருமாறு சவால் விட்டார். போலீஸார் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் கேட்கவில்லை. காமெடி பீசு என சொன்ன போலீஸாரிடம் யார் காமெடி பீசு என அடிக்க பாய்ந்தார் நாகராஜ்.
போலீஸாரை வாடா போடா என நாகராஜ் சொல்லிய நிலையில் அவரை நீ என் கால் உயரம் கூட இல்லை எங்களையே மிரட்டுறியா என போலீஸார் உருவ கேலி செய்தது போல் பேசியிருந்தனர். பின்னர் டவுசரில் இருந்த காசுகளை எல்லாம் வீசும் நாகராஜ், இதுக்குத்தானே என்னை இப்படி செய்றீங்க இந்தாங்க என கோபமாக பேசி கண்ணீர் விட்டு அழுகிறார்.
தொடர்ந்து ரகளை செய்த நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது வழுக்கி விழுந்ததால் எதிர்பாராதவிதமாத இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீஸார் அவருக்கு காலில் மாவுக்கட்டையும் போட்டுவிட்டனர்.
அப்போது நாகராஜ் கூறுகையில் என்னை போலீஸார் கேலி செய்தனர். மேலும் என் காலை உடைத்தது போலீஸ்தான். மூன்று போலீஸார் சேர்ந்துதான் என் காலை உடைத்தார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில் நாகராஜால் ஊன்றுக்கோலின் உதவியின்றி நடக்க முடியவில்லை. அவரால் வியாபாரத்திற்கும் செல்ல முடியவில்லை. இவரது மனைவியும் மாற்றுத்திறனாளி என்பதால் அவர்தான் இவருக்கு உதவிகளை செய்கிறாராம்.
இதுகுறித்து நாகராஜ் கூறுகையில் 6 மாதம் ஆனது என்னால் நடக்கவே முடியவில்லை. எனக்கு அரசு ஏதேனும் உதவி செய்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும். இப்போது சிலர் பண உதவிகளையும் செய்கிறார்கள். ஆனாலும் என்னால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க முடியவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எனக்கு உதவி செய்து என் காலை குணமாக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications