சாஸ்திரிபவனில் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டம் நடத்திய திவிகவினர் கைது!
இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் இந்தி திணிப்பை எதிர்த்து நுங்கம்பாக்கத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களிலும் மத்திய அரசு இந்தி மொழியில் பெயர்களை எழுதி வருகிறது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் இந்தி எழுத்துக்களை அழித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து கொளத்தூர் மணி உட்பட போராட்டம் நடத்திய 100க்கும மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications