கடும் வறட்சியால் கவலையில் விவசாயிகள் - பொங்கல் பண்டிகை இனிக்குமா?
நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயத்தை போற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்பதை கொண்டாடமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
செங்கோட்டை: நெல்லைமாவட்டம் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியான தென்காசி தாலுகா,செங்கோட்டை தாலுகா,கடையநல்லூர் தாலுகா ஆகிய பகுதிகளில் சுமார் 35ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்கள் உள்ளன. இதில் முழுக்க முழுக்க நெல் மட்டுமே பயிரிடப்பாட்டு வருகின்றன.
இந்த ஆண்டு கார் மற்றும் பிசான சாகுபடியில் தென்மேற்கு பருவமழையும்,வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் இங்குள்ள குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஸ்ரீமூலபேரி ஆகிய நீர்தேக்கங்களுக்கு தண்ணீர்வரத்து அடியோடு பாதிக்கப் பட்டது.

இந்த அணைகள் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 25ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சுமார் 700ஏக்கர் மட்டுமே பாசன செய்யபபட்டன. ஏராளமான விவசாயிகள் பாசனம் செய்யாமல் ஏற்கனவே கார்சாகுபடி செய்து மழையில்லாமல் பயிர்கள் கருகியதால் வாங்கிய கடனுக்கு பணத்தை திரும்ப செலுத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு பசுமையாக கணப்பட்ட பகுதிகள் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் 92ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளசேதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள நீர் நிலை ஆதாரங்கள் அனைத்தும் அடியோடு பாதிக்கப் பட்டன.
இதனை மேம்படுத்த அரசும், அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். குண்டாறு,அடவிநயினார் கருப்பாநதி,ஸ்ரீமூலபேரி ஆகிய நீர்த்தேக்கங்கள் கட்டிய காலத்தில் இருந்து இதுவரை தூர் வாரப்படவில்லை. இதனாலேயே இங்கு நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,குளங்கள் தூர் வாரப்பட்டு சீரமைக்கப் பட்டால் மட்டுமே இனி விவசாயிகள் மேமையடைய முடியும் என்கின்றனர்.
இரண்டு போகமும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்கமுடியாமலும் வட்டிக்காட்ட முடியாமலும் இனி அன்றாட செலவுகளுக்கு திணறும் நிலைக்கு தள்ளப்பாட்டுள்ளதாகவும், விவசாயத்தை போற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்பதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தர்போது 36 அடி உயரம் கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் 20அடியளவிலும்,132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் கோவில் நீர்தேக்கம் 70அடி கொள்ளளவிலும்,72அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்த்தேக்கம் 40அடி கொள்ளவிலும் தண்ணீர் இருப்பு உள்ளது.குடிநீர் பற்றாக்குறைகள் ஏற்ப்பாட்டால் அதனை சமாளிக்க அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications