For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி.. துரைமுருகன் புகழாரம்!

குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி என நினைவேந்தல் கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி என நினைவேந்தல் கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு தேசிய தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களை திமுக பொருளாளர் துரைமுருகன் ஆங்கிலத்தில் பேசி வரவேற்றார்.

இமயத்தை தொட்டுப்பார்த்தவர்

இமயத்தை தொட்டுப்பார்த்தவர்

அவர் பேசியதாவது, கருணாநிதி அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர்.

பொருளாதாரக் கொள்கை

பொருளாதாரக் கொள்கை

அகில இந்திய அரசியலில் ஆளுமை பெற்றவர் கருணாநிதி.வங்கிகளை தேசியமயமாக்கலாம் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.

மகத்தான மனிதர்

மகத்தான மனிதர்

கருணாநிதி சிறந்த பேச்சாளர், சிறந்த வசனகர்த்தா.
சிறந்த நிர்வாகி, கட்சியை திறம்பட கட்டிக் காத்தவர். மனித மனங்களைப் புரிந்து கொண்ட மகத்தான மனிதர் கருணாநிதி.

கருணாநிதிக்கு புகழாரம்

கருணாநிதிக்கு புகழாரம்

50 ஆண்டுகள் திமுகவை திறம்பட தலைமை தாங்கி நடத்தியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. செம்மொழி தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் கருணாநிதி. இவ்வாறு துரைமுருகன் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

English summary
Duraimurugan praises Karunanidhi in his Commemoration meeting. Karunanidhi Commemoration meeting started in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X