ரூ.1.5 கோடி சம்பாதித்ததாக ஹீலர் பாஸ்கர் வாக்குமூலம்.. போலீஸ் விசாரணையில் தகவல்!
போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் மருத்துவ பயிற்சி அளித்து மக்களிடம் இருந்து ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்தது விசாரணையில் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் மருத்துவ பயிற்சி அளித்து மக்களிடம் இருந்து ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்தது விசாரணையில் வெளியாகி உள்ளது.
போலீஸ் விசாரணையில் ஹீலர் பாஸ்கர் இதை வாக்குமூலமாக அளித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சென்ற வாரம் ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.
இதையடுத்து அவர் போலீஸ் மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

15 நாள் காவல்
ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.சி. 420 மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மக்களை மோசடி செய்து ஏமாற்றுதல், தவறான செயல்களுக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கோவை ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் 15 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
இந்த நிலையில் விசாரணைக்கு ஹீலர் பாஸ்கர் தொடக்கத்தில் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் பதில் அளிக்க முடியாது, உயரிய அதிகாரிகள் வந்தால் மட்டுமே பேச முடியும் என்று கூறியுள்ளார். அதேபோல் அறிவியல், மருத்துவம் தெரிந்த நபர்களிடம் மட்டுமே பேசவேன் என்று கூறியுள்ளார்.

மோசடி
இந்த நிலையில் தொடர் விசாரணையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, தனக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் தெரியும். டிவி, யூ டியூப், பயிற்சி வழங்குதல் மூலம் சம்பாதித்து வந்தேன். இதில் வருமானம் வந்ததால் முழு நேர தொழிலாக இதை செய்கிறேன். மருத்துவம் சார்த்த ஆலோசனைகளை கடந்த 8 வருடமாக இந்தியா முழுக்க சென்று மக்களுக்கு வழங்கி வருகிறேன் என்றுள்ளார்.

எவ்வளவு பணம்
அதேபோல், தன்னுடைய அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் கடந்த 8 வருடங்களில் மட்டும் 1.5 கோடி ரூபாய் பணம் சம்பாதித்து இருக்கிறேன். அறக்கட்டளைக்கு நிதி உதவி, பயிற்சி வழங்க கட்டணம் என்று இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை வைத்து இவர் மீது இன்னும் சில புதிய வழக்குகள் போடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications