தயாரிப்பாளர் மதன் மீது அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள வேந்தர் மூவீஸ் மதன் மீது அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக மாணவ-மாணவிகளிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் பட அதிபர் மதன் கைதானார். இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்தநிலையில் அமலாக்கப் பிரிவினர், மதன் மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு தொடர்பாக மதனிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
"இந்த வழக்கு தொடர்பாக மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும், விசாரணை முடிவுக்கு பிறகுதான் அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரிய வரும்," என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications