பெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என 'நா' கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி!
திருப்பூரில் பெண்ணை தாக்கிய அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திருப்பூரில் பெண்ணை தாக்கிய அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் கூட முதல்வருக்கு தெரியவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுபியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி காலை முதலே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அன்று மாலை 5 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.

பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி
மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை ரோட்டில் வைத்து கையால் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

அரசியல் கட்சிகள் கண்டனம்
இதில் அந்தப் பெண்ணின் கேட்கம் திறன் பாதிக்கப்பட்டது. போலீசாரின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஏடிஎஸ்பிக்கு எதிராக போராட்டம்
பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஏடிஎஸ்பி பாண்டியராஜனைக் கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இதுதொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அண்மையில் பதவி உயர்வு
ஆனால் ஏடிஎஸ்பி பாண்டியன் மீது பெயர் அளவுக்கு கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கடந்த மாதம் அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கியது.

நா கூசாமல் பொய்
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு, பெண்ணை அறைந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நா கூசாமல் பொய் கூறியுள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு முதல்வரே சப்பைக்கட்டு கட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications