திருவாரூர், கொளத்தூரிலும் பணம் பாய்ந்துள்ளது... அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பாமாக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணைத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து அன்புமணி புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாளை நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியிடம் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறேன். எனது புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நஜிம் ஜைதி கூறினார்.

Election commission should postpone election in Tamilnadu- Anbumani

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. டீ கடை முதல் அனைத்து பகுதிகளிலும் பட்டுவாடா நடைபெற்றுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி மற்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிமாநில அதிகாரிகளை நியமித்து தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா விஷயத்தில் தேர்தல் ஆணையம் மொளனம் காப்பது ஏன்?. தமிழகத்தின் எதிர்காலம் குறித்து மக்ககள் சிந்திக்க வேண்டும் என்று அன்புமணி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+